Lawyer : விழுப்புரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Lawyer : இந்திய தண்டனை சட்டத்தை பாரதீய நியாய சன்ஹிதா என்றும், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாரதீய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா என் றும், இந்திய சாட்சிய சட்டத்தை பாரதீய சாக்ஷ்ய அதிநியாயம் என்றும் மத்திய அரசு, சமஸ்கிருதத் தில் பெயர் மாற்றம் செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள், கடந்த 1-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு வக்கீல் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் பன்னீர் செல்வம், சுவைசுரேஷ், ராஜாராம், பாலகிருஷ் ணன், பிரகாஷ், சஞ்சய்காந்தி, லெனின் விஜய், தமிழ்மாறன், பிரின்ஸ்சோமு உள்பட பலர் கலந் துகொண்டனர்.