DMK : தி. மு. க. , வினர் அமைதி பேரணி, அஞ்சலி

DMK : விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி. மு. க. , சார்பில், கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி பேரணி மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், காலை 9: 00 மணிக்கு அமைதிப் பேரணியாக தி. மு. க. , வினர், திருச்சி சாலையில் கலைஞர் அறிவாலயம் வரை சென்றனர். பிறகு அங்குள்ள அங்குள்ள கருணாநிதி, அண்ணாதுரைசிலைகளுக்கு மாவட்ட பொருப்பாளர் கவுதமசிகாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம். எல். ஏ. , க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் தயா இளந்திரையன், முருகன், கற்பகம், மகளிரணி தேன்மொழி, நகர்மன்ற சேர்மன்கள் தமிழ்ச்செல்வி, தேவி முருகன், நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, கணேசன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், தெய்வசிகாமணி, வேம்பி ரவி, ஜெயரவி, மும்மூர்த்தி, முருகவேல், விஸ்வநாதன், ரவிச்சந்திரன், பிரபாகரன், ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, வாசன், சங்கீத அரசி, பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, விழுப்புரம் தி. மு. க. , நகர அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தி , அன்னதானம் வழங்கினர்.