Strike : கடையடைப்பு போராட்டம் வாபஸ்

89

Strike : திண்டிவனத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதளா சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்துள்ள நேரு வீதியில் புதிய சாலை போட வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நாளை 13ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 11: 30 மணியளவில், திண்டிவனம் பெருமாள் கோவிலில், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ராமு, குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், ‘நாளை (இன்று) இரவு முதல் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட நேரு வீதி உள்ளிட்ட சாலைகளை சீரமைத்து புதியதாக சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்து அதற்கான கடித்தை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, நாளை 13ம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வணிகர் சங்கத்தினர் அறிவித்தனர்.

You might also like