OPR: ஓபிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்

OPR: ஓமந்துாரிலுள்ள ஓ. பி. ஆர். சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ. பி. ஆரின் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்துார் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு, திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிதம்பரநாதன், வழக்கறிஞர் கிருபாகரன், சந்திரசேகர், கொள்ளார் பஞ்சாயத்து தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாஞ்சாலத்திலுள்ள காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.