Tindivanam Court : திண்டிவனத்தில் லோக் அதாலத் 541 வழக்குகளுக்கு தீர்வு

106

Tindivanam Court : திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மெகா லோக் அதாலத்தில் ரூ. 6 கோடியே 78 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மெகா லோக் அதாலத் நடந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது பாரூக் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். திண்டிவனம் முதலாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் கமலா வரவேற்றார்.

மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி செல்வி (பொறுப்பு) புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா பேசினர். வழக்கறிஞர் சங்க தலைவர் சண்முகம் , அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பூபால் , வழக்கறிஞர் நலச் சங்க செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

லோக் அதாலத்தில் சிவில், குற்றவியல், மோட்டார் வாகன இழப்பீட்டுவழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட 541 வழக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வு தொகை ரூ. 6 கோடியே 91 லட்சத்து 96ஆயிரத்து 441 ஆகும். இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரடே் மாலதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திண்டிவனம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.

You might also like