Mailam: சிறுதானிய சாகுபடி பிரசாரத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

146

Mailam: விவசாயிகளை சிறுதானியம் சாகுபடி செய்ய வலியுறுத்தி அரசு செய்யும் பிரசாரத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரும்பு விவசாயிகள் அணி மாநில செயலாளர் சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: வேளாண் துறை நடத்தும் சிறுதானிய விழிப்புணர்வு பிரசாரம், விவசாயிகளை பாழும் கிணற்றில் தள்ளுவது போல் உள்ளது. சிறுதானிய பயிர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 4 மடங்கு விலை குறைந்து உள்ளது. 2021ம் ஆண்டில் 12 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்ட கம்பு இந்த ஆண்டு 3000 ரூபாய்க்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லும் மத்திய, மாநில அரசியல் கட்சிகள் விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்து விட்டு சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்க வேண்டும். இதை செய்யாமல் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு துணை நிற்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like