Gingee: செஞ்சி அரசு கல்லூரியில் 8ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Gingee: செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் (பொறுப்பு) செய்திக்குறிப்பு: நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 8ம் தேதி கல்லுாரி வளாகத்தில் துவங்குகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 9: 00 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது. அன்று, அனைத்து பாடப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கும், பி. ஏ. , ஆங்கில மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
10ம் தேதி பி. எஸ்சி. , கம்ப்யூட்டர் சயின்ஸ், 11ம் தேதி பி. காம். , – பி. பி. ஏ. , 12ம் தேதி பி. ஏ. , தமிழ் பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நாட்களில் மாணவர்கள் காலை 9: 00 மணிக்குள் வரவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்கள் அசல் மற்றும் 2 நகல்களும், 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
கலந்தாய்வு முடிந்தவுடன் சேர்க்கை கட்டணம் செலுத்த தயாராக வரவேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு விண்ணப்பத்தில் உள்ள மின்அஞ்சல் முகவரிக்கும், மொபைல் எண்ணிற்கும் தகவல் வரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.