Gingee: செஞ்சியில் 9 நாள் புத்தக திருவிழா துவக்கம்

65

Gingee: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில் செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 நாள் புத்தக திருவிழா இன்று 24ம் தேதி துவங்குகிறது. ஜன. 1ம் தேதி வரை 9 நாள் நடைபெறும் புத்தக திருவிழாவின் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கான மதிப்புறு தலைவர், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர், சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சேகர் விழா விளக்க உரை நிகழ்த்தினார். ஒருங்கிணைப்பாளர் வாசு கார்த்திகேயன் நன்றி கூறினார். இதில் மாவட்ட பொருளாளர் சுகதேவ், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரநாராயணன், தென்னரசு மற்றும் விழா குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று துவங்கும் புத்தக திருவிழாவை கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் துவக்கி வைக்கிறார். முதல் நாள் விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான் சிவக்குமார் பங்கேற்கின்றனர். 2ம் நாள் சூழலியலாளர் கோவை சதாசிவம், 3ம் நாள் தரணிவேந்தன் எம்.பி., எழுத்தாளர் செல்லதுரை, 4ம் நாள் இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார், 5ம் நாள் ஊடகவியலாளர் கார்த்திகைசெல்வன், 6ம் நாள் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், 7ம் நாள் எழுத்தாளர் தீபலட்சுமி, 8ம் நாள் நாடகவியலாளர் காளீஸ்வரன், 9ம் நாள் கல்வியாளர் ரங்கபூபதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

You might also like