DMK: திண்டிவனத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

61

DMK: விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட துணை செயலர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம், நகர செயலாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி பேசுகையில், தமிழக சட்டசபையின் இந்தாண்டு முதல் கூட்டத்தை மரபுபடி துவக்கவே கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த கவர்னர், தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றார்.

தொடர்ந்து, தமிழர்களை அவமதிக்கும் கவர்னர் ரவியை விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார். ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், மும்மூர்த்தி, தங்கம், விஸ்வநாதன், நகர செயலாளர் சக்கரை, ஜீவா, மகளிரணி தேன்மொழி, இளைஞரணி மணிகண்டன், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like