Alcohol: பேருந்தில் மது பாட்டில் கடத்தல்..நடத்துநா் உள்பட மூவர் கைது

Alcohol: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மதுவகைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடலூரிலிருந்து, வேலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை திண்டிவனம் போலீசார் சனிக்கிழமை மாலை சோதனையிட்டனர். அப்போது, அந்தப் பேருந்தில் புதுச்சேரியிலிருந்து மது வகைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 151 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வி.டி.சி. அண்ணா நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் நவீன் (23), திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியைச் சேர்ந்த குப்புசாமி மகன் பார்த்திபன் (32), கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் முனுசாமி மகன் சந்திரன் (52) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒரு காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.