Marakkanam: இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

1,901

Marakkanam: மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத் துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து மாவட்டத் தடுப்புப் படையினருடன் இணைந்து செங்கல் சூளைகள், அரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை யாரேனும் பணிக்கு அமர்த்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் வகையில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வுகளை அண்மையில் மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டு, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

You might also like