தூக்கத்தில் தந்தை விழுந்ததில் ஒரு மாதக் குழந்தை உயிரிழப்பு
Villupuram : மயிலம் அருகே பாதிராபுலியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் – அம்பிகா தம்பதியின் ஒரு மாதக் குழந்தையான தீக்ஷிதன், கடந்த 2-ம் தேதி தூக்கத்திலிருந்த தந்தை ஸ்ரீதர் தற்செயலாகக் குழந்தை மீது விழுந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், இது குறித்து மயிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.