Adjournment Of Semman Quarry Case Against Minister Ponmudi : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஒத்திவைப்பு.

171

Adjournment Of Semman Quarry Case Against Minister Ponmudi : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஒத்திவைப்பு.

 

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி. மு. க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம். பி. , ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் பதில் மனுதாக்கல் செய்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You might also like