Tindivanam: இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் பலி
Tindivanam : அடுத்த நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (60) என்பவர், மதன்குமார் என்பவருடன் ஸ்கூட்டரில் சென்றபோது, சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் மதன்குமார் திடீரென பிரேக் போட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஒலக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.